Thursday, November 25, 2010

நாச்சியப்பண்ணே


தாயாய் தந்தையாய்
தகுதிகளில் சிறந்தோன்...

மகனாய் பேரனாய்
மனங்களிலே சிறந்தோன்...

அண்ணனாய் தம்பியாய்
அன்பினிலே  சிறந்தோன்...

கணவனாய் துணைவனாய்
கண்ணியத்தில் சிறந்தோன்...

மாமனாய் மச்சினனாய்
மாசற்றுச் சிறந்தோன்...

சிற்றப்பனாய் பெரியப்பனாய்
சிந்தையிலே சிறந்தோன்...

தோழனாய் சீலனாய்
தொடர்புகளில் சிறந்தோன்...

அய்யனாய் மெய்யனாய்
அகங்களிலே சிறந்தோன்...

ஆசானாய் ஆலோசகனாய்
அறிவுரையில் சிறந்தோன்...

இப்படி
அத்தனை வடிவிலுமே
அற்புதமாய் பொருந்திவிட...

எப்படி முடிந்ததையா
எங்களையும் பிரிந்துவிட...

சிறியோர் எம் தவறுகளை
சீக்கிரமே மன்னித்து...

வாழ்த்துங்கள் எங்களை
வானத்தில் இருந்து...

வணங்குகிறோம் உங்களை
விழியிரெண்டும் நனைந்து!

No comments:

Post a Comment